×

உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு பயன்

திருவாரூர், பிப். 12: திருவாரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, வேளாண்மைத்துறை மூலம் உழவன் செயலியானது கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. இந்த உழவன் செயலி மூலம் விவசாயிகள் அரசின் மானிய திட்டங்கள், இடுபொருள்கள் முன்பதிவு விவரம், பயிர்காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு விவரம், விதை இருப்பு விவரம், வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு எடுத்தல், சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு,

உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் தினசரி சுற்றுப்பயண விவரம், பண்ணை வழிகாட்டி, இயற்கை பண்ணைய பொருட்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை தெரிந்து கொள்ளலாம். எனவே இதில் தங்களுக்கு எந்த திட்டத்தில் பயன் வேண்டுமோ அந்த திட்டத்தில் விண்ணப்பங்களை இந்த உழவன் செயலி மூலமே அனுப்பி வைக்கலாம். இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண். கல்லூரி மாணவர்கள் பயிற்சி